image

சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புப் பிரிவு

நோக்கங்கள்:

  • போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குதல்
  • தனிப்பட்ட மற்றும் சமூக இடையூறுகளை குறைக்க மருந்துகளின் பயன்பாட்டுடன் தொடர்புடையது
  • போதைப்பொருள் பாவனை தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
  • • வதிவிட சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புச் சேவைகளை வழங்குதல்.
  • • சமுதாய சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புச் சேவைகளை வழங்குதல்.
  • • பிணியாய் நிலையங்களுக்கு ஆற்றுப்படுத்தி தேவையின் பேரில் ஒளடதங்களை வழங்கி உளவளத்துணையை ஏற்பாடுசெய்தல்.
  • • வீட்டிலிருந்துகொண்டே போதையூட்டும் ஒளடதங்களிலிருந்து விடுபடுவதற்கு அவசியமான சேவைகளையும் உளவளத்துணையையும் வழங்குதல்.
  • • போதையூட்டும் ஒளடத பாவனை சம்பந்தமாக தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் தனிமனிதருக்கு ஏற்படுத்தப்படும் தடைகளைக் குறைத்தல்.
  • • போதையூட்டும் ஒளடதங்களை உபயோகிக்கும் ஆட்களை அதிலிருந்து விடுவித்து அவர்களின் திறமைகளை இனங்கண்டு அதற்குரிய வாழ்க்கைத்தொழில்சார் பயிற்சிப் பாடநெறிகளில் ஈடுபடுத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்.
  • • போதையூட்டும் ஒளடதங்களை உபயோகிக்கும் ஆட்களை அதிலிருந்து விடுவித்து நாட்டின் இளைஞர்களை சரியான பாதையில் இட்டுச்செல்லல்
  • • போதையூட்டும் ஒளடத பாவனையில் ஈடுபாடுள்ள ஆட்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவசியமான உளவளத்துணையை வழங்கி சம்பந்தப்பட்ட வேறு அரச அலுவலர்களதும் உதவியை வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்.
  • • வதிவிட போதையூட்டும் ஒளடத சிகிச்சைகளிலிருந்தும் புனர்வாழ்வளிப்பிலிருந்தும் விலகிய பின் போதையிலிருந்து விடுபட்டுள்ள நிலையைப் பேணுவதற்கு அவசியமான பிற்பாதுகாப்புச் சேவைகளை வழங்குதல்.


  • சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித்திட்டம்

    சபையினால் முன்னெடுக்கப்படும் சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் காம் ஒரு வருடத்திற்குக் கூடுதலாகும். வதிவிட சிகிச்சைகளைப் பெறுவதற்கு இரண்டு மாத காலம் நிலையத்தில் சேவைநாடுநர்கள் தங்கியிருக்க வேண்டும். அதனடிப்படையில் கொடுப்பனவுகளுடன் சேவைநாடுநர்களை உட்படுத்திக்கொள்வதற்கு 14 நாள் சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றும் அமுல்படுத்தப்படுகிறது. வதிவிட காலம் முடிவடைந்ததும் சேவைநாடுநர் மீண்டும் போதையூட்டும் ஒளடத பாவனையைத் தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இணைவார். சேவைநாடுநரின் குணமடையும் செயன்முறைக்கு உதவுதலும் சிரமமான உணர்வுகளை முகாமை செய்துகொள்வதற்கு உதவியளிப்பதற்கு இங்கு சேவைநாடுநரின் பெற்றோர்/ பாதுகாவலர்களும் உற்சாகமாக பங்கேற்கச் செய்யப்படுகின்றனர்.

    வதிவிட நிகழ்ச்சித்திட்டத்துக்கு சாதாரண வாழ்வுப் பாணிகளுக்கு அமைவான செயற்பாடுகளும் அனுபவங்களும் இரசனையுணர்வை தீவிரப்படுத்தும் செயற்பாடுகளும் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வொன்றைக் கழிப்பதற்கு விளையாட்டு அப்பியாசங்கள், யோகாசனம் போன்ற செயற்பாடுகள்‚ உயர் மன ஆரோக்கியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உளவிய் ஆலோசனைகள்‚ நினைவிற்கொண்டு செயலாற்றுவதற்கான செயற்பாடுகளையும் (mindfulness activities) ஆன்மிக நலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எளிய மத செயற்பாடுகளையும் கூட்டுணர்வின் ஊடாக வெற்றிபெறுதல்‚ வெற்றி-தோல்வி எதையும் ஒருசேர ஏற்றுக்கொள்வதற்குப் பழக்கும் செயற்பாடுகள்‚ தமது திறமைகளை மெருகேற்றிக்கொள்வதற்கான செயற்பாடுகள் உள்ளிட்ட போதையூட்டும் ஒளடத பாவனையிலிருந்து ஆளொருவரை விடுவித்துக்கொள்வதற்கு உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மட்டத்திலான உயர் செயற்பாடுகளை உள்ளடக்கிய விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

    சிகிச்சையளிப்புச் செயற்பாடுகள்

    குழுநிலை ஆலோசனை‚ தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனை தேவைக்கேற்ப அமுல்படுத்தப்படுகிறது. மேலும்‚

  • • கல்வி நிகழ்ச்சித்திட்டம்
  • • உளவியல் கல்வி நிகழ்ச்சித்திட்டம்
  • • இசை வழி சிகிச்சை‚ கலை வழி சிகிச்சை
  • • பொழுதுபோக்கு நிகழ்ச்சித்திட்டம்
  • • மனவழுத்த மேலாண்மை (Stress management) (தேக அப்பியாசம்‚ தியானம்‚ யோகாசனம்)
  • • உள் மற்றும் வெளி வேடிக்கை விநோத செயற்பாடுகள்
  • • தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் (தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு இணையாக)
  • • பின்னைய ஓம்பல் (post hosting) நிகழ்ச்சித்திட்டம்
  • • தொடராய்வு சந்திப்புகள்‚ குடும்ப சந்திப்புகள்
  • • சுகாதார தடுப்பு (Health prevention) நிகழ்ச்சித்திட்டம்
  • • விவசாய நடவடிக்கைகள்
  • • நினைவிற்கொண்டு செயலாற்றும் (mindfulness) ஆன்மிக நிகழ்ச்சித்திட்டம்
  • சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையங்கள்

    போதையூட்டும் ஒளடத சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புக்கான 04 நிலையங்கள் தற்போது சபை வசம் உள்ளன. இந்நிலையங்கள் மூலம் அடிப்படை வசதிகளுடன் துப்புரவான தங்குமிடங்கள்‚ சமநிறை உணவுவேளை ஆகிய அடிப்படைத் தேவைகள் சேவைநாடுநர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல் சிறந்த பயிற்சியுடன்கூடிய உயர் கல்வியுடன்கூடிய நட்புறவான பணியாட்குழுவினால் ஆலோசனை நடவடிக்கைகளும் நிருவாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொருவரது சிகிச்சையளிப்புத் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிகிச்சயைளிப்புத் திட்டமொன்றின்படி எதிர்வரும் வதிவிட சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புக் காலத்தில் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வதிவிட காலத்திற்குப் பின்னரும்கூட அமுல்படுது;தப்படும் ஒரு நீண்டகால சிகிச்சையளிப்புத் திட்டமாக இருப்பதுடன், சேவைநாடுநர் நிலையத்திலிருந்து உரிய காலத்தின்படி வெளியேறிய பின்னரும் மாதாந்த தொடராய்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்தி சேவைநாடுநரின் குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பைப் பேணி சிகிச்சையளிப்புச் செயன்முறை மிகவும் பயனுள்ளதாக மேற்கொள்ளப்படுகிறது.


    NDDCB சிகிச்சை மையங்கள்

    இந்த பிரிவின் முக்கிய பொறுப்பு இலங்கையில் உள்ள தனியார் மற்றும் நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்களின் மருந்து சிகிச்சை முறை மற்றும் மறுவாழ்வு செயல்முறைகளை கண்காணித்து உதவுதல்.

    தலங்கம

    “தலங்கமா” தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் 172, சாந்தி மாவதா தலங்கம

    தொலைபேசி: +94 11 2788090
    தொலைநகல் : +94 11 2788090
    மின்னஞ்சல் : sethsevana@nddcb.gov.lk



    நவ்திகந்தா

    “நவாடிகாந்தயா” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உரபோலா, நிட்டாம்புவ

    தொலைபேசி: +94 33 2283060
    தொலைநகல் : +94 33 2283060
    மின்னஞ்சல் : navadiganthaya@nddcb.gov.lk


    காலி

    “காலி” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உனவதுனா, காலி

    தொலைபேசி : +94 91 2224443
    தொலைநகல்: +94 91 2224443
    மின்னஞ்சல் : mithsevana@nddcb.gov.lk



    கண்டி

    “கண்டி” இளைஞர் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மாம்பிட்டியா எஸ்டேட் ஹேண்டெஸா, பெரடெனியா

    தொலைபேசி : +94 81 2315504
    தொலைநகல் : +94 81 2315504
    மின்னஞ்சல் : methsevana@nddcb.gov.lk